tamilnadu

img

மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு கை கொடுக்குமா?

தமிழகத்தில் மோட்டார் தொழிலை பொருத்தவரை லாரி, மினி லாரி, சிறிய சரக்கு வாகனங்கள், டூரிஸ்ட் வாக னங்கள், மேக்ஸி கேப், ஆட்டோ டாக்ஸி, கால்  டாக்ஸி, டாடா மேஜிக், க்ஷேர் ஆட்டோ இருசக்கர, நான்கு சக்கர வாகன பழுது பார்க்கும் பட்ட றைகள் உள்ளன.

இந்த மோட்டார் தொழிலில் மட்டும்  30 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்திற்கு அடுத்தபடி யாக குக்கிராமம் முதல் பெருநகரம் வரை மோட்டார் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் இல்லாத இடமே இல்லை என்ற அளவிற்கு இந்தத் தொழில் அத்தியாவசியமான தொழி லாக இருந்து வருகிறது. ஏபிடி பார்சல் சர்வீஸ்,  பர்வின் டிராவல்ஸ் போன்ற ஒரு சில நிறு வனங்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வருங்கால வைப்பு நிதி உள்ளது. ஆனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 99.9 விழுக்காட்டினருக்கு வருங்கால வைப்பு நிதியோ, பணி பாதுகாப்போ கிடையாது.

இதுகுறித்து தமிழ்நாடு சாலை போக்கு வரத்து சம்மேளன தலைவர் கே.ஆறுமுக நயினார் கூறுகையில், அரசு போக்குவரத்து சில  தனியார் போக்குவரத்து போன்ற நிறு வனங்களைத் தவிர தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்குகின்றன. தொழிலாளர்கள் அனைவரும் அன்றாடம் வாக னம் ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமா னமே அவர்களது அடிப்படையான வருவாயா கும். பெரும்பகுதி சுய தொழில் என்ற அடிப்ப டையில் உரிமையாளரும் அவரே, ஓட்டுநரும், தொழிலாளியும் அவரே என்ற நிலையே உள்  ளன. லாரியோ, காரோ, ஆட்டோவோ சொந்த மாக வைத்திருந்தாலும், அதில் 95 விழுக்காடு  வாகனங்களின் அனைத்து ஆவணங்களும் கடன் கொடுத்த வங்கியிலோ அல்லது தனியார்  நிதி நிறுவனங்களில்தான் இருக்கும். “இந்த வாகனம் எனக்கு சொந்தம் ஆனால் எனக்கு சொந்தமில்லை” என்ற அடிப்படையில்தான் அவர்கள் வாகன உரிமையாளர்களாக உள்ள னர்.

வாகனத்தில் வரும் வருமானத்தில் 50  விழுக்காடு கட்டாயம் எரிபொருளுக்கு செலவு  செய்ய வேண்டும். பணம் கொடுத்து எரி பொருள் நிரப்பி இயக்கினாலும், எரிபொருள்  போக மீதித் தொகை இந்த தொழிலாளர்க ளுக்கு முழுவதும் சொந்தமல்ல. முதலில் வாகன பராமரிப்பு, அடுத்ததாக வாகன கட னுக்கு உரிய தவணை. இரண்டும் போக மீதி  இருக்கும் பணமே தொழிலாளர்களுக்கு சொந்தம். உதாரணத்திற்கு ஒரு கால் டாக்சி  2,000 ரூபாய்க்கு ஓடுகிறது என்றால் அதில்  சுமார் 600 ரூபாயில் இருந்து 700 ரூபாய் வரை  வாகனத்தில் எரிபொருளுக்கு செலவாகும். கால் டாக்சி நிறுவனங்களுக்கு கமிஷனாக 20  விழுக்காட்டிற்கு மேல் வழங்க வேண்டி யுள்ளது. இது தவிர அவரது குடும்ப செலவிற்கு  குறைந்தபட்சம் 500 ரூபாய் எடுத்தாலும் கூட,  அவர் தவணை செலுத்துவதற்கு என தனி யாக பணத்தை எடுத்து வைக்க முடியாது.  வழக்கமாக ஒரு வாகனத்தின் தவணை ரூபாய் 18 ஆயிரம் ரூபா யில் இருந்து 20 ஆயிரம் வரை இருக்கும். அப்படியென்றால் தின சரி 700 ரூபாய் தவணைக்காக ஒதுக்க வேண்டும். 300 ரூபாயில் சென்னை நகரத்தில் வாடகை கொடுத்து குடும்பம் நடத்துவது என்பது சாத்தியமில்லை. இதே நிலைதான் மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் நிலைமை.

இந்நிலையில் ஊரடங்கு உத்தர வால் கடந்த ஒருமாத காலமாக வாகனப்  போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள் ளன. ஊரடங்கு முடிந்து தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கினாலும் உடனடியாக வாகன இயக்கங்கள் சாத்தியமில்லை. தொழி லாளர்கள் சரியான நிலைக்கு வர எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது கணக்கிடவே முடி யாது. மறுபுறத்தில் வாகனங்கள் ஓடினால் தான் மோட்டார் தொழிலில் சார்ந்த பட்டறை கள் உள்ளிட்ட பலவும் இயங்கும்.

தமிழகத்தில் 3 லட்சம் லாரிகள் இரண்டரை  லட்சம் சிறிய சரக்கு வாகனங்கள் 2 லட்சம்  டூரிஸ்ட் வேன்கள் ஒரு லட்சம் டாக்சி,  கால் டாக்சி, ஒன்றரை லட்சம் ஆட்டோக்கள் என சுமார் 10 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதை நம்பி  30 லட்சம் தொழிலாளர்கள் பணி  புரிகின்றனர். இந்தக் கணக்கில் தனியார் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள், தனிநபர் வாக னங்கள் போன்றவை சேர்க்கப்  படவில்லை. தனிநபர் வாகனங்க ளிலும் லட்சக்கணக்கான ஓட்டு னர்கள் உள்ளனர்.

ச்இந்த தொழிலாளர்களுக்கு நிவரணம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழக அரசு நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 80 ஆயிரம் பேருக்கு நிவராணம் கிடைத்துள்ளது. பெரும்பான்மையானவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. 

எனவே ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், பேட்ச் பெற்றவர்கள், கால்  டாக்சி நிறுவனத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மற்றும் இந்த தொழிலை சார்ந்துள்ள பட்டறை  உள்ளிட்டவற்றை கணக்கெடுத்து அனை வருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மாநில அரசு ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 10 ஆயிரம் என அறிவித்துள்ளது. அதன் அர்த்தம் 10 ஆயிரம் ரூபாய் இல்லையென்றால் ஒருவர் குடும்பம் நடத்த இயலாது என்பதாகும். எனவே அரசு ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். இல்லையென்றாலும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாயாவது வழங்க வேண்டும் என்றார். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி அந்த சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-அம்பத்தூர் ராமு